18 ரீல்ஸ் சார்பில் செளத்ரி தயாரிப்பில் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டகால்டி’ .இதில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

தற்போது, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய ‘சர்வர் சுந்தரம்’ படமும் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. பால்கி இயக்கியுள்ள இந்தப் படம் பைனான்ஸ் சிக்கலால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.

இதனால் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்டி’ மற்றும் ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.