டில்லி

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன.

கடந்த பிப்ரவரி மாத்ம் 15 முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன.   இந்த தேர்வில் பிசிக்ஸ் மற்றும் எகனாமிக்ஸ் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என பல பொய்த் தகவல்கள் பரவின.   ஆனால் அந்த செய்திகளை சிபிஎஸ்இ  வாரியம் மறுத்தது.

இன்று இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.   இதில் காசியாபாத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா மற்றும் முசாபர்நகரை சேர்ந்த கரிஷ்மா ஆகிய இரு மாணவிகள் முதலிடத்தை பிடித்துள்ள்னர்.   இவர்கள் 500 க்கு 499  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் மண்டல அளவில் 98.2% மாணவர்கள் தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதல் இடத்தை பிடித்துள்ளது.  அடுத்ததாக சென்னை மண்டலம் 92.93% மாணவர்கள் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது.  டில்லி மண்டலம் 91.87% தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தை பெற்றது.