கொச்சின்: கேரளாவிலுள்ள காசர்கோடு மற்றும் மஞ்சீஸ்வரம் ஆகிய இரண்டு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், கொரோனா பாதிக்கப்பட்ட நபரை சந்தித்த காரணத்தால், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

காசர்கோடு சட்டமன்ற உறுப்பினர் என்ஏ நெல்லிக்குன்னு மற்றும் மஞ்சீஸ்வரம் சட்டமன்ற உறுப்பினர் கம்ருதீன் ஆகிய இருவரும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள்
“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை சந்தித்து, அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். எனவே, என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்ளும் முடிவை மேற்கொண்டேன்.

அந்த நபர், சாலையில் எனது வாகனத்தை நிறுத்தி, என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு வேண்டுகோள் விடுத்தார்” என்றார் சட்டமன்ற உறுப்பினர் கம்ருதீன்.

சட்டமன்ற உறுப்பினர் நெல்லிக்குன்னு கூறுகையில், “நான் சந்தித்த கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு நபர், அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர். அவரை ஒரு திருமணத்தில் சந்தித்தேன். அந்தத் திருமணத்தில் சிறிதளவு நபர்களே கலந்துகொண்டிருந்தனர். அந்த நபர் அடிக்கடி துபாய்க்கு சென்று வருபவர்” என்றார்.