சண்டிகர்: தன்னை சந்தித்த எம்எல்ஏக்களக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டில்  தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 3 அமைச்சர்கள் மற்றும் 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அங்கு மாநில சட்டமன்றம் நேற்று கூறியது.  அப்போது, முதல்வர் அம்ரீந்தர்சிங்கை, எம்எல்ஏக்கள் நிர்மல் சிங் மற்றும் குல்பீர் சிங் ஜிரா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து,  மருத்துவர்களின் ஆலோசனையின்படி முதல்வர் அமரீந்தர்சிங் 7 நாட்களை தனிமைப்படுத்தி கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.