திருபுவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொடங்கப்பட்டுள்ள 6ம் கட்ட அகழாய்வில்  கடந்த சில மாதங்களுக்கு விலங்கின் எலும்புக்கூடு, மனித எலும்புக்கூடுகள் என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போத மேலும், அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பகுதி தமிழர்களின் வரலாற்று புதைவிடமாக காணப்பட்டு வருகிறது. அங்கு தற்போது  6ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.

இதுவரை  18 குழிகள் வரை தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற் றுள்ள அகழ்வாய்கின்போது சுமார் 900 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும்,  விலங்கின எலும்பு கூடு, பல வரிசை கொண்ட செங்கல் சுவர், முதுமக்கள் தாழிகள், தங்க நாணயம், சுடுமண் உலை, நந்தை ஓடுகள், குழந்தையின் முழு உருவ எலும்பு கூடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில்,  தற்போது மேலும் 2 குழிகள் புதிதாக தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள செப்டம்பர்  30-ந் தேதி வரை அரசு அனுமதி வழங்கி உள்ளதால் இந்த பணிகளை வேகமாகவும், விரைந்து முடிக்கவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.