புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் பாலங்கிர் மாவட்டம் துட்கமல் கிராம வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 2 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இருவரும் ஒடிசா அரசு சார்பில் தலைக்கு 9 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சல்கள் சஞ்சிப் மற்றும் ராகேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.