சென்னை:
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 கர்ப்பிணிகள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. சமீப காலமாக கோயம்பேடு கிளஸ்டர் காரணமாக சென்னை உள்பட அண்டை மாவட்டங்களிலும் தொற்று பரவல் தீவிரமானது. தற்போது வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பி வருபவர்களால் தொற்ற பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 303 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர். 22 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 2 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், இன்று  2 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அம்மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது.