சென்னை:

ரஷ்யாவில் முதுநிலை மருத்துவ கல்வி பயின்று வந்த தமிழக மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த நவீன், திருவள்ளூரை சேர்ந்த ஜெய்வந்த் ஆகிய இருவரும் கடலில் குளித்த போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தனர். தகவலறிந்த அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.