போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீசாரின் வேட்டையில் 2 பெண் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அம்மாநிலத்தின் பாலாகட் மாவட்டத்தில் உள்ள போர்வன் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து, கிர்னாபூர் சரக காவல்துறையும், நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. அதிகாலை 12.30 மணியளவில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் 45 மணி நேரத்தில் மற்றொரு நபரும் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட இருவரும் பெண்கள் என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றி உள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டையில் உள்ளதாகவும் கூறி உள்ளனர்.