சோபியான்

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்புப் படையினர் இரு தீவிர வாதிகளை சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பயங்கரவாதிகளை தேடும் பணியையும் பாதுகாப்புப் படையினர் மும்முரமாக நடத்தி வருகின்றனர். இவ்வாறு நேற்றுஇரவு காஷ்மீர் மாநிலம் சோபியான் நகரில் உள்ள சீதாபோரா பகுதியில் தேடுதல் நடந்தது.

அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூட் நடத்தி உள்ளனர். அதை தொடர்ந்து பாதுகாப்பு ப்டையினரும் பதில் தாக்குதல் நடத்தி உள்ளன்ர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதன் பிறகு பதுகாபுப்படையினர் அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை கைப்பற்றி உள்ளனர். அதில் ஏராளமான துப்பாக்கிகளும் வெடி பொருட்களும் பிடிபட்டுள்ளன. தொடர்ந்து அங்கு துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.