ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீர் காசிகாண்ட் பகுதியில் பாதுகாப்பு படையின் வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம் தொடங்கியது. அப்பகுதியை ராணுவம் சுற்றி வளைத்தது.

அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து இருதரப்பு இடையேயும் மோதல் வெடித்தது. சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார்.