ஸ்ரீநகர்:

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பள்ளியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப். கான்வாய் மீது பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வீரர் பலியானார். இதன் பின்னர் பயங்கரவாதிகள் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் பதுங்கினர்.

அவர்களை பிடிக்க ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் உடல்களை கைப்பற்றிய ராணுவ வீரர்கள் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.