கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் பிரபாகர் அறிவித்தார். தமிழக அரசு அறிவித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறையின் ஆணை 217க்கு உட்பட்டு தொழில் நிறுவனம் மற்றும் வணிக கடை இயங்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சூளகிரி பகுதியை சேர்ந்த 52 வயது மற்றும் 60 வயதுள்ள இரு பெண்களுக்கு இன்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 2 தினங்கள் முன்பு இவர்கள் பெங்களூர் சென்று திரும்பியதாகவும், அறிகுறி காட்டாத நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இரு பெண்களும், வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பசுமை மண்டலம் என்ற அந்தஸ்திலிருந்து, கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலம் என்ற நிலைக்கு மாறிவிட்டது.