கொழும்பு:

லங்கை தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று காலை மீண்டும் ஒரு குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இலக்கையின் நுவரெலியா நகரின் ஹவா எலிய பகுதியில் 200 டெட்டனேட்டர் கள் பறிமுதல்  செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள பிரபலமான தேவாயலம் உள்பட நட்சத்திர விடுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும்  வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள  நிலையில்,  500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத  அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது 9 பேர் எனவும், அதில் ஒருவர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில, இன்று காலை தலைநகர் கொழும்பு அருகே புகோடா நகரில் மீண்டும் குண்டு வெடிப்பு  சம்பவம் அரங்கேறியது. புகோடா நகரில்  உள்ள நீதிமன்ற வளாகம் அருகே நிகழ்ந்த இந்த சம்பவத்தில்  எந்தவித உயிர்பலியும்  ஏற்படவில்லை.

நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர், ராணுவத்தினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைநகர் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடமிருந்து  21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் பறிமுதல் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் 61 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 3 பேர் ஆயுதங்களுடன் பிடிபட்டுள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.