கொழும்பு:

இலங்கைக்கு எதிரான முதல் 20:-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு 20:-20 தொடர் நடக்கிறது. இலங்கை. இந்தியா, வங்கதேச அணிகள் இதில் விளையாடுகின்றன. கொழும்புவில் இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியா&இலங்கை அணிகள் மோதின.

டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 18.3 ஓவரில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.