சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 35 பேரையும் காவு வாங்கி உள்ளது.
bty

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை  98,392 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 38,947 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 22,686 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, சென்னையில் ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 964 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக விவரம்: