சென்னை:
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை  42,687  ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில்,  23,409 பேர் குணமடைந்து உள்ளனர்.18,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை  397 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 190 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 74 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 1809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.