சென்னை:
சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர்  சென்னையில் நேற்று  1,298 பேர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மொத்த கொரோனா பாதிப்பு 87,235 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் இதுவரை 70,651 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,127  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெரிவித்தது. சென்னையில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,456  ஆக உயர்ந்துள்ளது.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,977 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும்  முறையே 1,629 மற்றும் 1,250 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 230 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் (21.07.2020) வருமாறு:
திருவொற்றியூர் – 482
மணலி – 230
மாதவரம் – 385
தண்டையார்பேட்டை – 808
ராயபுரம் – 1,002
திரு.வி.க நகர் – 1,114
அம்பத்தூர் – 909
அண்ணா நகர் – 1,629
தேனாம்பேட்டை – 1,250
கோடம்பாக்கம் – 1,977
வளசரவாக்கம் – 725
ஆலந்தூர் – 571
அடையாறு – 1,167
பெருங்குடி – 394
சோழிங்கநல்லூர் – 408