டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,85 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா  உயிரிழப்பும் 88ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. கொரோனாவில் 2வது கட்ட அலை பரவி உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.  கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு தினசரி 90ஆயிரத்தை தாண்டி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 87,392 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,92,650 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில், 92,926  பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 43,99,298  ஆக அதிகரித்துள்ளது. நேற்று பாதிப்பை விட குணமடைந்தோர் விதிகம் வெகுவாக உயர்நதுள்ளது.

நேற்று மட்டும் 1,135 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  87,909  ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 10,04,274  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.