சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 21 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 307ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிடப்பட்டு வருகிறது. இன்று வெளியான தகவலில் மட்டும் தமிழகத்தில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழக்க, மொத்த  எண்ணிக்கை 307 ஆக உயர்ந்திருக்கிறது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 18,325 ஆக உயர்ந்துள்ளது. 16,279 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 1,242 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்  காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6,21,171 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று 13,219 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.