பாட்னா: பிகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
பிகார் மாநிலம் பாட்னாவில் கங்கை ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் 40 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் குறைந்தது 21 பேர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து மீட்புப்பணி நடைபெறுகிறது.

இந்த விபத்தைத் தொடர்ந்து பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தானும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் இணைந்து பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, நாளை அரசு சார்பில் நடைபெற இருந்த மகரசங்கராந்தி கொண்ட்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.