சென்னை

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.8120 கோடி முதலீட்டில் 21 புதிய தொழில் திட்டங்களை தொடங்க முதல்வர் பழனிசாமி தலைமையிலான உயர்நிலைக் குழு அனுமதி அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்துக்கு தொழில் முதலீடு களை ஈர்க்க அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம், இணையவழி ஒற்றைச் சாளர முறை, உலகமுதலீட்டாளர்கள் மாநாடு, புரிந்துணர்வு ஒப்பந்த திட்டங்களுக்கான வழிகாட்டி அலுவலர்கள் நியமனம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி அரசு முறை பயணம் மேற்கொண்டார். தொழில் வழிகாட்டி மையத்தில் நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், முதலீடுகளை ஈர்க்க தொழில்வளர் தமிழ்நாடு திட்டம், முதல்வர்அலுவலகத்தில் முதலீட்டு வழிகாட்டுதல் பிரிவு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படு கின்றன.

அத்துடன், முதலீட்டு வழிகாட்டு தலுக்கும், ஒற்றைச் சாளர முறையில் அரசு அனுமதிகளை துரிதப்படுத்தவும் முதல்வர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் கூட்டம், முதல்வர் பழனிசாமிதலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில்துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, எம்.சி.சம்பத்,கே.சி.கருப்பணன், ஆர்.பி.உதயகுமார், பா.பெஞ்சமின், தலைமைச் செயலர் கே.சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ஒற்றைச் சாளரமுறையில் வழங்கப்பட்ட தொழில்அனுமதிகள், பெரும் தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்புடைய நிலுவைகள், உலக முதலீட்டாளர்கள் மாநாடு திட்டங்களின்தற்போதைய நிலை, சிறு, குறு,நடுத்தர நிறுவனங்கள் தொடர்புடைய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அரசு அனுமதிக்காக விண்ணப்பித்து பல்வேறு நிலைகளில் இருந்த 21 தொழில் திட்டங்கள் பற்றி விவாதிக் கப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டது. இந்த திட்டங்கள் மூலம் ரூ.8,120 கோடிக்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து, 16 ஆயிரம்பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாவது உறுதியாகியுள்ளது. இத்திட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.