டெல்லி:
மிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
விஜயகாந்த்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், திருப்பூர் கோர்ட்டு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. அதற்கு தடை கோரி விஜயகாந்த் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
supreme court
அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த தோடு, அரசை விமர்சித்தால் எதற்கு  அவதூறு வழக்கு தொடுக்கிறீர்கள் , மேலும்  இதற்காக அரசு வழக்கறிஞரை ஏன் பயன்படுத்துகிறீர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மீது இதுவரை தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 17ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தபோது, தமிழகஅரசு சார்பில் அவதூறு  வழக்கு பற்றிய அறிக்கை  சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கடந்த 5 ஆண்டுகளில் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்களுக்கு எதிராக 213 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.