டில்லி,

பாலியல் தொடர்பான  4,694 ஆபாச இணையதள பக்கங்கள் முடக்கம்  மத்திய அரசு  நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுவரை 2,133 ஆபாச இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்து உள்ளது.

குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவது குறித்தும், ஆபாச இணை தளங்களை முடக்குவது குறித்தும்  மாநிலங்களைவையில் விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர், மனோஜ் சின்ஹா, லோக்சபாவில் எழுத்துப்பூர்வ மாக பதில் அளித்தார்.

அதில், குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல் தொடர்பான வீடியோக்கள் உள்ள, 4,694 இணையதள பக்கங்களை முடக்கும்படி, மத்திய அரசு ஐ.எஸ்.பி. நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து  இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளின்படி, இதுவரை 2,133 இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.