சென்னை:

மிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 2532  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  59,377 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்  1493  பேர் பாதிக்கப்பட்டனர்.

தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் மட்டும் இதுவரை 17,683 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 22,887 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 601 பேர் உயிரிழந்துள்ளனர்.

21.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 55.85% பேர் (22,887) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1.47% ஆக உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு விவரம்:

மொத்தமுள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. தண்டையார்பேட்டையில் மேலும் 153 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 5,116 பேரும்,தேனாம்பேட்டை மண்டலத்தில் 4,967 பேரும், கோடம்பாக் கத்தில் 4,485 பேரும், அண்ணா நகரில் 4,385 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.