சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,450-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 1132 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை  1,06,626 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், 12,287 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் நேற்று 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,537 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.