காபூல்

ஃப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கர வாத தாக்குதலில் 22 போலிசார் மரணம் அடைந்துள்ளனர்.

ஆஃப்கானிஸ்தானில் கந்தகார் மாநிலத்தில் தெற்குப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களின் மீது நேற்று இரவு பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  காவல்துறையினரும் எதிர்த்து போராடி உள்ளனர்.

சில மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 22 போலீசார் மரணம் அடைந்தனர்.    இந்த தாக்குதல் தாலிபன் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் தாலிபன் தரப்பில் இந்த தாக்குதல் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.   சமீப காலங்களில் ஆஃப்கன் அரசு படைகளுக்கு எதிராக தாலிபான் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நிகழ்த்து வருவது தெரிந்ததே.