டெல்லி :
ந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு  புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்க கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் உயிரிழந்தனர்.  இதையடுத்து  கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,336 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 1,218 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26,617  ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 9,951 ஆகவும் அதிகரித்து உள்ளது.