சென்னை:

சீனாவில் ஆர்டர் செய்யப்பட்ட கொரானா டெஸ்ட் கருவிகளில் முதல்கட்டமாக 24ஆயிரம் கருவிகள் இன்று  சென்னை வந்து சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருவிகள் விரைவில் சோதனைக்கு உபயோகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய நிலையில், சீனாவில்  கொரோனா டெஸ்ட் கருவிகளை தமிழகம் முதன்முதலாக ஆர்டர் செய்தது. அந்த கருவிகள் கடந்த வாரமே தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  5 லட்சம் கருவிகள்  நேற்று இந்தியா வந்தடைந்தாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அதில் 24ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருவிகள் மூலம்  15 நிமிடங்களில் கொரோனா அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.