சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, நாளை தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும்  செய்யப்பட்டு உள்ளன.

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று மாமல்லபுரம் – காரைக்கால்  இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்க உள்ளதால் தமிழகம், புதுச்சேரி அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 விரைவு ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக இன்றும் நாளையும் 30 விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.