24 ஏகாதசி விரதமும் அதன் பலன்களும் பற்றிய பதிவுகள் – பகுதி 1

விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம்.  இது 24 வகைப்படும்.   ஒவ்வொரு ஏகாதசி விரதத்துக்கும் ஒரு பலன் உண்டு.

இன்று நாம் முதல் 12 ஏகாதசி விரதம் குறித்து இங்கு காண்போம்.

காமதா ஏகாதசி

விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்.

பாப மோசனிகா ஏகாதசி

நாம் செய்த பாவங்கள் தொலையும் நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.

மோகினி ஏகாதசி

உடல் சோர்வு நீக்கும். பாவம் நீங்கி புண்ணியம் பெருகும். அறியாமை நீங்கி நல்ல புத்தி உண்டாகும்

 வருதினி ஏகாதசி

உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.

நிர்ஜல ஏகாதசி

வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன் வாயு அம்சம்.

அபரா ஏகாதசி

ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பணம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.

விஷ்ணு சயன ஏகாதசி/ தயினி ஏகாதசி

முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும். ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

யோகினி ஏகாதசி

விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.

புத்திரத ஏகாதசி

குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாகத் திகழவும் செய்வார்கள்.

காமிகா ஏகாதசி

துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும்.

பரிவர்த்தன ஏகாதசி / பத்மநாபா ஏகாதசி

இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.

அஜ ஏகாதசி

குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாகத் தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது)