சென்னை:

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  24,545ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை 244 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11,730 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 12,570  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று சென்னையில் மட்டும் 24,545 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில்,  1243 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 21 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 18,325 ஆக அதிகரித்தது.மேலும் 16,279 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்தது. அதில் தனியார் மருத்துவமனையில் 6 பெரும், அரசு மருத்துவமனையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

60 மற்றும் 60 வயதுக்கு கீழ் 10 பேர் இன்று உயிரிழந்த நிலையில், 30, 39 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.