சென்னை:
மிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,749 ல் இருந்து 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 93,537 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவாக இன்று  7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனா வால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,43,297 ல் இருந்து 1,51,055 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்சென்னையில் இதுவரை 77,625 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,923 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
சென்னையில் 93,537 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 3,237 பேருக்கும் திண்டுக்கல்லில் 2,115 பேருக்கும் திருநெல்வேலியில் 3,595 பேருக்கும், ஈரோட்டில் 586, திருச்சியில் 3,289 பேருக்கும், நாமக்கல் 510 மற்றும் ராணிப்பேட்டை 3,467, செங்கல்பட்டு 11,764 மதுரை 9,595, கரூர் 352, தேனி 3,556 மற்றும் திருவள்ளூரில் 11,395 பேருக்கு, தூத்துக்குடியில் 5,291, விழுப்புரத்தில் 2,923 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 664 பேருக்கும், திருவண்ணாமலையில் 4,933 தருமபுரியில் 570 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் திருப்பூரில் 668, கடலூர் 2,250, மற்றும் சேலத்தில் 2,845, திருவாரூரில் 1,256, நாகப்பட்டினம் 533, திருப்பத்தூர் 864, கன்னியாகுமரியில் 3,393 மற்றும் காஞ்சிபுரத்தில் 6,796 பேருக்கும், சிவகங்கை 1,991 மற்றும் வேலூரில் 4,854 பேருக்கும், நீலகிரியில் 661 பேருக்கும், தென்காசி 1,607 கள்ளக்குறிச்சியில் 2,938 பேருக்கும், தஞ்சையில் 1,892, விருதுநகரில் 5,573, ராமநாதபுரத்தில் 2,951 பேருக்கும், அரியலூர் 800 மற்றும் பெரம்பலூரில் 296 பேருக்கும், புதுக்கோட்டையில் 1,504 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,686பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.