சென்னை: தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 3,91,303ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் சில வாரங்களாக தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் 6,998 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3,32,454 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 52,128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 107 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 6,721 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,27,949பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,11,955பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13,371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 20 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,623 ஆக உள்ளது.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,164 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 899 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 794 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4,471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 6,86,088-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு லட்சத்து 27ஆயிரத்து 949பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 12,467 பேருக்கும், திண்டுக்கல்லில் 5,990 பேருக்கும் திருநெல்வேலியில் 8,770 பேருக்கும், ஈரோட்டில் 2,396, திருச்சியில் 6,873 பேருக்கும், நாமக்கல் 1,672 மற்றும் ராணிப்பேட்டை 9,646, செங்கல்பட்டு 24,129, மதுரை 13,590, கரூர் 1,350, தேனி 11,864 மற்றும் திருவள்ளூரில் 23,062 பேருக்கு, தூத்துக்குடியில் 10,801, விழுப்புரத்தில் 6,398 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1,913 பேருக்கும், திருவண்ணாமலையில் 9,626, தருமபுரியில் 1,149பேருக்கும், திருப்பூரில் 2,143, கடலூர் 9,525, மற்றும் சேலத்தில் 8,511, திருவாரூரில் 2,955, நாகப்பட்டினம் 2,105, திருப்பத்தூர் 2,617, கன்னியாகுமரியில் 8,840 மற்றும் காஞ்சிபுரத்தில் 15,960 பேருக்கும், சிவகங்கை 3,826 மற்றும் வேலூரில் 9,850 பேருக்கும், நீலகிரியில் 1,473 பேருக்கும், தென்காசி 4,926, கள்ளக்குறிச்சியில் 5,493 பேருக்கும், தஞ்சையில் 5,871, விருதுநகரில் 12,049, ராமநாதபுரத்தில் 4,484 பேருக்கும், அரியலூர் 2,334 மற்றும் பெரம்பலூரில் 1,203 பேருக்கும், புதுக்கோட்டையில் 5,372 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.