சென்னை : தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகிதம் ஏழை மாணவர்கள் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கல்விச்சட்டம் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்காக தமிழகஅரசு  கடந்த 2018-19 கல்வியாண்டில்  ரூ. 304 கல்விக்கட்டணம் செலுத்தி உள்ளதாக அறிவித்து உள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒவ்வொரு தனியார் பள்ளியிலும், 25 சதவீத இடங்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழை மாணவர்களுக்கு தமிழகஅரசு கல்விக்கட்டணம் செலுத்தி வருகிறது.

கட்ந்த  2018 -19ம் ஆண்டுக்கான கல்வி கட்டணமாக, தனியார் பள்ளிகளுக்கு மட்டும்  303.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கல்வி உரிமைச்சட்டப்படி, கடந்த, 2016 – 17ம் ஆண்டு, ஒரு மாணவருக்கான கல்வி செலவு தொகை, 25 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. அதுவே, அடுத்த கல்வியாண்டில், 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையை, 2017 முதல், 2019 வரைக்கும், மறு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், மாணவர்கள் சேர்ந்த பின், ஜூன் மாதத்தில், 50 சதவீதம்; டிசம்பரில், 25 சதவீதம்; மீதி தொகையை ஏப்ரலில், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.அத்துடன், 2018 – 19, 2019 – 20ம் ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க, உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணையை , நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறது. கடந்த  விசாரணையின்போது, ‘கல்வி செலவு நிலுவை தொகையை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஆறு வாரங்களில், அரசு வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  பள்ளி கல்வித் துறை சார்பில் தாக்கல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி,  அரசு பள்ளியில், ஒரு மாணவனுக்கு ஆகும் செலவு அல்லது கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணம், இதில் எது குறைவோ, அந்த தொகையின் அடிப்படையில், 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
அதன்படி, கடந்த 2018 – 19ம் ஆண்டுக்கான கட்டணமாக, 303.70 கோடி ரூபாயை, தனியார் பள்ளிகளுக்கு, அரசு வழங்கி உள்ளது.
2019 – -20ம் ஆண்டுக்கான கட்டணம் தொடர்பாக, பள்ளிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் பரிசீலித்து வருகிறது. என்றும், .அரசு பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கான செலவு அடிப்படையில், தனியார் பள்ளிகள் கோரிய தொகையில், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அரசுக்கு அனுப்பப்படும்.அதன்பின், கட்டண தொகையை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கும்
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை, நான்கு வாரங்களுக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.