சென்னை:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி ஆகியோர்சென்றனா். மு.க.ஸ்டாலினுடன் 40 நிமிடங்களுக்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் இன்று காலை 10 மணியளவில் கையெழுத்தானது.

இதுகுறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்றும் வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம். இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்கலாடை தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  என்றும் தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் ஏற்றம்-இறக்கம் என்பது சகஜம் என்றும் கூறினார்.