சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு  குறைந்து  வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.  நேற்று  ஒரே நாளில் 1,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,27,949-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,136 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதுவரை 1,11,955 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், , 13,371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் நேற்று  மட்டும் 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,623 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.