சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97-ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது.

அதிக பட்சமாக சென்னையில் இன்று 1290 பேர் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டு உள்ளனர்.  தமிழகத் தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று  மேலும் 118 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,839 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று  கொரோனாவில் இருந்து  5,606 பேர் குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,38,060-ஆக உயர்ந்துள்ளது.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு  வந்த 6,1679 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 899 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 798 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4,020 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 6,97,892-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு: அரியலூர் -44 செங்கல்பட்டு -294 சென்னை – 1,290 கோவை -484 கடலூர் -286 தர்மபுரி – 36 திண்டுக்கல் -37 ஈரோடு -102 க.குறிச்சி -78 காஞ்சிபுரம் -329 குமரி -159 கரூர் -32 கிருஷ்ணகிரி -33 மதுரை -31 நாகை -84 நாமக்கல் -70
நீலகிரி-4 பெரம்பலூர்-18 புதுக்கோட்டை-143 ராமநாதபுரம்-39 ராணிப்பேட்டை-121 சேலம்-451 சிவகங்கை-18 தென்காசி-98 தஞ்சை-123 தேனி- 184 திருப்பத்தூர்-56 திருவள்ளூர்-280 தி.மலை-58 திருவாரூர்- 105 தூத்துக்குடி-105 நெல்லை-156 திருப்பூர்-97 திருச்சி-83 வேலூர்-158 விழுப்புரம்-189 விருதுநகர்-79