சென்னை:
சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா பலி அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள் ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில், 71,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1,120 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலான கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 26 பேர் மரணம் அடைந்துள்ளார்கள்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையில் 6 பேரும், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா பலி அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள் ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில், 71,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1,120 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலான கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 26 பேர் மரணம் அடைந்துள்ளார்கள்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையில் 6 பேரும், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.