டெல்லி: நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 1 முதல் 200 ரயில்களை முக்கிய நகரங்களுக்கு இயக்க முடிவெடுத்து, டிக்கெட்  முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் கூறியதாவது: 17 ரயில் மருத்துவமனைகள் கொரோனா பராமரிப்பு மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. 2,600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் மே 1 முதல் 35 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
வரக்கூடிய 10 நாட்களில், 36 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணிக்க உள்ளனர். 4 நாட்களில் மட்டும் சராசரியாக 260 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தினமும் 3 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இயற்கை பேரழிவு காரணமாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து எனக்கு தகவல் கடிதம் மூலம் தரப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் எப்போது ரயில்களை இயக்க முடியும் என்பதை விரைவில் கூறுவார்கள்.
அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தவுடன், நாங்கள் மேற்கு வங்கத்திற்கு ரயில்களை இயக்குவோம். இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக, ரயில்வே அமைச்சகம் ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறினார்.