டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33லட்சத்தை தாண்டியது.  கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 75,995 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பில், உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.

கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 75,995 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானதால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33லட்சத்து 07ஆயிரத்து, 749 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரேனாவுக்குசிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,23,104  ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 56,191 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 25லட்சத்து 23ஆயிரத்து 443  ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1017 பேர் உயிரிழந்த நிலையில்,  இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஆயிரத்து 629  ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கபட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும், ஆந்திரா மாநிலம் 3வது இடத்திலும் தொடர்ந்து வருகிறது.