ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,43,23,081  பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும்  8,28,887 லட்சமாக அதிகரித்து உள்ளது.

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா உலக நாடுகளை மிரட்டி வருகிறது இதை கட்டுப்படுத்த உலகநாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. பல நாடுகள் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

இந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை 6 மணி நிலவரப்படி, 2,43,23,081 ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,28,887 ஆக அதிகரித்து உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1,68,66,711ஆக உயர்ந்து உள்ளது.

தற்போதையை நிலையில், 6,627,483  பேர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா தொடர்ந்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 271,811 மேலும் தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,323,081 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 828,887 பேர் உயிரிழந்த நிலையில், தொற்றில் 16,866,711 பேர குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் 6,627,483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

2வது இடத்தில் பிரேசிலில் தொடர்ந்து வருகிறது. அங்கு நேற்று மட்டும் புதிதாக 47,828 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்,   இதுவரை 3,722,004 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  117,756 லட்சம் பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்,  தற்போதைய நிலையில்  695,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 60,629 பேர் உயிரிழந்து உள்ளனர்.  தற்போதைய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 75,995 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை  2,523,443 குணமடைந்து உள்ளனர்.

தொடர்ந்து 4வது இடத்தில ரஷியாவும், 5வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவும் உள்ளது.