சென்னை: மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, மதிமுக, உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.