பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுண் இன்று காலை துவங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ‘கார்ட்டோசாட் – 2’ என்ற செயற்கைக்கோள் பூமியை ஆராயும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.  இதை ஏவும் ‘பி.எஸ்.எல்.வி. சி–38’ (PSLV C-38) ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுண் வியாழக்கிழமை அதிகாலை 5.29 மணிக்குத் துவங்கியது. .

28 மணி நேரம் நீடிக்கும் இந்த கவுண்ட்டவுண் முடிந்ததும் நாளை காலை 9.29க்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.  இந்த ராக்கெட்டில் கொண்டு செல்லப்படும் கார்ட்டோசாட் – 2 செய்ற்கைக்கோள் பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது மற்றும்  கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல நோக்கத்திற்கு உதவும். .

712 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் அடுத்த  ஐந்து வருடங்களுக்கு விண்ணில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.