டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 34.63 ஆக உயர்ந்துள்ளதாகவும்,கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.52 லட்சமாக உயர்ந்திருப்பதாகவும் மத்தியசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,63,973 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 1,021 பேர் கொரோனாவால்  மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62,550 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.81 சதவீதமாக உள்ளது
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 65050 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,48,999 ஆக உயர்ந்துள்ளது.   குணமடைந்தோர் விகிதம் 76.47 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,52,424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.