டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,61,240 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில், கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 76,664 பேருக்கு புதிதாக தொற்று உறுதியான நிலையில்,  கொரோனா பாதிப்பில், உலக அளவில்  3வது இடத்திலும், தினசரி தொற்று பாதிப்பில் முதலிடத்திலும்   தொடர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 76,664பேருக்கு புதிதாக தொற்று உறுதியானதால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,61,240 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 7,50,411 பேர் தொற்று காரணமாக சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மட்டும் 64,475பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குண மடைந்துள்ளோர் எண்ணிக்கை 26,47,538 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1018  பேர் உயிரிழந்த நிலையில்,  இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 62,713 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கபட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும், ஆந்திரா மாநிலம் 3வது இடத்திலும் தொடர்ந்து வருகிறது.