கராச்சி: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணிக்கு அஸார் அலியும், டி-20 அணிக்கு பாபர் ஆசமும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தாண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில், இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் மற்றும் டி-20 தொடர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

எனவே, இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணிக்கு அஸார் அலியும், டி-20 அணிக்கு பாபர் ஆசமும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இப்பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் சோகைல் கான், முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹைதர் அலி முதன்முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார்.

இங்கிலாந்திற்கு புறப்படும் முன்பாக, வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெறும். ‍அணியில் 4 ரிசர்வ் வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.