டெல்லி:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில்  தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தீர்ப்பு வெளியிடும் தேதி நவம்பர் 7ந்தேதி நடைபெறும் என்று சிபிஐ நீதிபதி ஓ.பி. சைனி அறிவித்து உள்ளார்.

இதன் காரணமாக தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் நாள் மீண்டும் தள்ளிப்போயுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமே விசாரணை குறித்த வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், 25ந்தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து  முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி எம்.பி. உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதி மன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில்  இந்த பரபரப்பான தீர்ப்பு குறித்த தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், தீர்ப்பு குறித்த தேதி அடுத்த மாதம் 7ந்தேதி அறிவிக்கப்படும் என ஓ.பி. சைனி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமயிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது, கூட்டணி கட்சியான திமுகவை சேர்ந்த ராஜா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது,  2ஜி ஸ்பெக்டரம் உரிமம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதன் காரணமாக  ரூ.1.76 லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றது என  சிபிஐ. வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ராஜா,  கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் வழக்குகளை  நீதிபதி ஓ.பி.ஷைனி தலைமையிலான, டில்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு காரணமாக ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ, கடந்த 2011ம் ஆண்டு தாக்கல் செய்தது. அதையடுத்து நடைபெற்ற இறுதி கட்ட விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வரும் 25ந்தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்ற நீதிப ஓ.பி.சைனி கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை நீதிமன்றம் வந்த நீதிபதி ஓ.பி. சைனி, இந்த வழக்கில் மேலும் முக்கிய ஆவனங்கள் சேர்க்க வேண்டியதிருப்பதால், தீர்ப்பு வெளியகும் தேதி குறித்து அடுத்த (நவம்பர்)  மாதம் 7ந்தேதி அறிவிக்கப்படும் என்று கூறி உள்ளார்.

அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி உள்ளார்.