லண்டன்:

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடியை கடனாக பெற்றுவிட்டு தொழிலதிபர் விஜய் மல்லையாக பிரிட்டனுக்கு ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர விசாரணை அமைப்புகள் முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது குறித்து விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் இரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘ இந்திய நீதித்துறை நடைமுறையின் மீது நான் நம்பிக்கை வைக்காததற்கு மிகுந்து வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த துறையை நான் நம்பியிருந்தால் நான் இந்தியாவிலேயே தங்கியிருப்பேன். அப்படி இருந்திருந்தால் நானும் தற்போது விடுவிக்கப்பட்ட மனிதாக இருந்திருப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.