சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. 2018-ம் ஆண்டு மே மாதம் வெளியான இந்தப் படம், பலராலும் விமர்சிக்கப்பட்டது.

படத்துக்கு எதிராகப் போர்க்கொடிதூக்கினாலும் இந்தப் படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைத்தது.

தனது இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் 2-ம் பாகத்தைத் தொடங்கவுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார். இதில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தை அடுத்த வருடம் (2020) கோடை விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.